< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
|14 Sep 2024 1:14 PM GMT
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாட்டா நகருக்கு இன்று பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் ஷோஹப் மாவட்டம் தனசரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.