< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
|10 May 2024 11:46 AM GMT
கடந்த மாத தொடக்கத்தில் தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தைபே,
தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் ஹுலியன் கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் தைவானின் தலைநகர் தைபேவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.