< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
|16 April 2024 9:02 AM GMT
இன்று காலை 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த வாரம் 9ம் தேதி மேற்கு பப்புவா மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.