< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலியா: வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 5 பேர் பலி
உலக செய்திகள்

ஆஸ்திரேலியா: வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 5 பேர் பலி

தினத்தந்தி
|
13 April 2024 9:43 AM GMT

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கென்பரா,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொண்டி ஜங்ஷன் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வழக்கம்போல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அப்போது வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்