< Back
உலக செய்திகள்
பள்ளிக்கூட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

Image Courtesy: AFP

உலக செய்திகள்

பள்ளிக்கூட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

தினத்தந்தி
|
26 Nov 2022 12:09 AM GMT

பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

பிரேசிலியா,

பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சண்டோ மாகாணம் விக்டோரியா நகரம் ஆர்க்ரூஸ் பகுதியில் அருகருகே அரசு மற்றும் தனியார் என 2 பள்ளிக்கூடங்கள் உள்ளன.

இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை பள்ளிகள் செயல்பட தொடங்கின. அப்போது காலை 10 மணி அளவில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அருகில் இருந்த மற்றொரு பள்ளிக்கூடம் மீதும் தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியது 17 வயதான சிறுவன் என தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய சிறுவனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்