< Back
உலக செய்திகள்
இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை...!
உலக செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை...!

தினத்தந்தி
|
12 Dec 2022 9:38 AM GMT

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு,


புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.


அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 24 பேரும் சிறையிலில் அடைக்கப்பட்டனர்.


இந்த நிலையில், இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊர் காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வர தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்