< Back
மாநில செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
22 March 2023 6:51 PM GMT

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22), மெக்கானிக். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மனோஜ் குமாரை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் அந்த சிறுமியை மனோஜ்குமார் கற்பழித்துள்ளார். தற்போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் கோவையில் பதுங்கி இருந்த மனோஜ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்