< Back
மாநில செய்திகள்
விஷம் தின்ற வாலிபர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

விஷம் தின்ற வாலிபர் சாவு

தினத்தந்தி
|
16 Aug 2023 6:43 PM GMT

விஷம் தின்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமான காரணத்தால் நடராஜன் எலி மருந்தை தின்றுள்ளார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவா் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் நடராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தசம்பவம் குறித்து நடராஜனின் தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்