< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 May 2022 2:12 PM GMT

ராதாபுரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராதாபுரம்:

ராதாபுரத்தை சேர்ந்தவர் திருமால் மகன் பிரம்மநாதன் என்ற நாராயணன் (வயது 38). இவர் மதுபோதையில் கோவில் திருவிழா கூட்டத்தில் நின்றபோது அவரை தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரம்மநாதன் வீட்டில் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்