< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
நீலகிரி
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
6 Oct 2023 7:00 PM GMT

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ஊட்டி அருகே எமரால்டு பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 23). இவர் தனியார் பள்ளி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த எமரால்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்