< Back
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
4 Jun 2022 4:54 PM GMT

கயத்தாறு அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்து வலசால்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் ராம்ராஜ் (வயது 30). இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராம்ராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்