< Back
மாநில செய்திகள்
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் - கவர்னர் ஆர்.என் ரவி
மாநில செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் - கவர்னர் ஆர்.என் ரவி

தினத்தந்தி
|
19 Aug 2022 8:44 AM GMT

மகளிர் மேம்பாடு, தொழிற்துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் கூறினார்.

நாகூர்,

நாகை மாவட்டம், நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் 215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில்,

உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம், அடுத்து வரும் 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்க வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய கவர்னர் அதற்கு மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். மேலும், பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்