< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு

தினத்தந்தி
|
18 Sep 2023 6:45 PM GMT

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார்


ராமநாதபுரம் அருகே களரியை சேர்ந்த தங்கவேலு மகன் வினோத்குமார் (வயது38). இவர் மனைவி, குழந்தையுடன் ராமநாதபுரம் மகாசக்தி நகரில் குடியிருந்து வந்தார். தண்ணீர் கேன் வினியோகிக்கும் வேலை செய்து வந்த வினோத்குமார் மது குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டதால், அவரது மனைவி, குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

இதனால், விரக்தியடைந்த வினோத்குமார் வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் வேலைக்கு செல்லாததாலும், போனை எடுக்காததாலும் சந்தேகம் அடைந்த இவரின் தந்தை தங்கவேலு நேரில் சென்று பார்த்தபோது இவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்