< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
8 Oct 2023 8:06 PM GMT

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே உள்ள ஆதிப்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 34). இவரது மனைவி அல்லி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோடீஸ்வரன் வேலைக்கு செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்ட நிலையில் அல்லி தனது குழந்தைகளுடன் ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கோடீஸ்வரன் அவ்வப்போது தனது குழந்தைகளை சென்று பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று கோடீஸ்வரன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்