< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
21 May 2022 6:57 PM GMT

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 42). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மரவநத்தத்தைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்