< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் திருடிய வாலிபர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 Nov 2022 9:05 PM GMT

அம்மன் கோவில்களில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் மேலூர் கீழத்தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் லோகேஸ்வரன் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பத்தன்று கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் சிலையில் இருந்த தங்க தாலி மற்றும் தங்ககாசு உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலத்தெருவில் பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த தங்கதாலி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 32) என்பதும், கோவில்களில் பூட்டை உடைத்து தங்கத்தாலிகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்