< Back
மாநில செய்திகள்
பணத்தை வசூல் செய்ய சென்றவரை தாக்கிய வாலிபர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பணத்தை வசூல் செய்ய சென்றவரை தாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2023 5:47 PM GMT

ஆம்பூர் அருகே பணத்தை வசூல் செய்ய சென்றவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்

ஆம்பூர் டவுன் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பிரதாப்குமார் (24) என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணத்தை வசூலிப்பதற்காக பிரதாப்குமார் வீட்டிற்கு செல்வகுமார் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரதாப்குமார் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்குமாரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்