< Back
மாநில செய்திகள்
தந்தை, மகனை தாக்கிய வாலிபர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தந்தை, மகனை தாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2022 3:03 PM GMT

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தந்தை, மகனை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் மலைராஜ் (வயது39). ஆட்டோ டிரைவர். அவரது ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த ஆட்டோவில் அமர்ந்து பேசி உள்ளனர். இதனை அவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவரது ஆட்டோ கண்ணாடி உடைக்க ப்பட்டிருந்தது. இதுகுறித்து மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் போஸ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற போஸின் மற்றொரு மகன் குமாரையும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிஷோர் டேனியல் என்பவரை கைது செய்தார். மேலும் அவரது நண்பர்களான காளிராஜ், சங்கர் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்