< Back
மாநில செய்திகள்
சிறுமியுடன் தகராறு செய்த வாலிபர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

சிறுமியுடன் தகராறு செய்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 Jan 2023 7:20 PM GMT

சிறுமியுடன் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் குப்பூரை சேர்ந்தவர் டில்லி மகன் புருஷோத் (வயது 21). இவர் தனது நண்பர்களுடன் சுற்றுலாவாக கடலூர் சில்வர் பீச்சுக்கு நேற்று வந்திருந்தார். பின்னர் சில்வர் பீச்சில் மணலில் நின்றிருந்த போது, அங்கு முதுநகரை சேர்ந்த 17 வயது சிறுமியும் நின்று கொண்டிருந்தாள். இதை பார்த்த புருஷோத் குடிபோதையில் அந்த சிறுமியிடம் தகராறு செய்து, கையால் நெட்டி தள்ளி கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி அந்த சிறுமி கடலூர் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்