< Back
மாநில செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து இரும்பு பொருட்கள்-பணம் திருடிய வாலிபர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து இரும்பு பொருட்கள்-பணம் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
10 Jun 2022 8:53 PM GMT

கடையின் பூட்டை உடைத்து இரும்பு பொருட்கள்-பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஜாமுதீன்(வயது 40). இவர் அதே பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை அவர் மீண்டும் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பொருட்கள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அரியமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கடையில் திருடியது திடீர் நகர் பகுதியை சேர்ந்த உதுமான் அலி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்