< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இளம்பெண் திடீர் சாவு
|22 July 2022 7:48 PM GMT
இளம்பெண் திடீரென்று பரிதாபமாக இறந்தார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கூந்தன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு பவித்ரா (வயது 20) என்ற மகளும், 2 மகன்களும் உண்டு.
பவித்ரா உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறாமல் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் பவித்ரா திடீரென மயங்கிய விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.