< Back
மாநில செய்திகள்
இளம்பெண் மர்ம சாவு
தென்காசி
மாநில செய்திகள்

இளம்பெண் மர்ம சாவு

தினத்தந்தி
|
12 April 2023 7:00 PM GMT

கடையநல்லூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரம்யாபாரதி (வயது 27). இவருக்கும் கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. உடல் நலக்குறைவு காரணமாக ரம்யாபாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் ரம்யாபாரதி வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரம்யாபாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக ெதரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்