< Back
மாநில செய்திகள்
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
17 March 2023 6:45 PM GMT

செங்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விக்னேஷ்வரி (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் பண்பொழியில் உள்ள திருமலை கோவிலுக்கு சென்று வரலாம் என்று மணிகண்டன் தனது மனைவி விக்னேஷ்வரியை அழைத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே வலியால் அவர் அலறி துடித்தார்.

பரிதாப சாவு

அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ்வரி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்து போன விக்னேஷ்வரிக்கு 4 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்