< Back
மாநில செய்திகள்
27 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

27 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
3 Sep 2023 6:45 PM GMT

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் 27 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

27 காலி இடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஆதிதிராவிடர் நல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம்-2 பேர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தலா ஒருவர் என 5 காலிப்பணியிடங்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் 22 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரம், இடைநிலை ஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படும்.

முன்னுரிமை

வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் நாளை(செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். அதன்பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்