< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
|24 March 2023 6:30 PM GMT
உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள காகித ஆலை நிறுவன வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன், துணை பொது மேலாளர்கள் மகேஷ், ராதாகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் நவநீத கிருஷ்ணன், மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து உலக தண்ணீர் தின உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.