< Back
மாநில செய்திகள்
உலக பட்டினி தினம்; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

உலக பட்டினி தினம்; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம்

தினத்தந்தி
|
26 May 2024 5:30 AM GMT

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்