< Back
மாநில செய்திகள்
சுதந்திர தினத்தன்று  தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்கு  தொழிலாளர் துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
15 Aug 2022 5:53 PM GMT

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் சசிகலா ஆகியோர் ஆலோசனைப்படி நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் கூட்டாய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா? என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.

56 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

29 கடைகளில் ஆய்வு செய்ததில் 17 கடை நிறுவனங்களிலும், 44 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 34 உணவு நிறுவனங்களிலும், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 56 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்மந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.

எனவே மேற்கண்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்