< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மாடியில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
|14 May 2023 6:45 PM GMT
ஓசூரில் செல்போனில் பேசி கொண்டிருந்த போது மாடியில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நந்து ராய் என்கிற மிதுன்ராய் (வயது 24). இவர் ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மிதுன்ராய் தங்கி இருந்த இடத்தில் 3-வது தளத்தில் இருந்தவாறு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மிதுன்ராய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிதுன்ராயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.