< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
10 May 2023 6:45 PM GMT

சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி இறந்தார்.

ஊத்தங்கரை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல் செங்கத்தை சேர்ந்தவர் மகி (வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டை- திருப்பத்தூர் சாலையில் குரங்குகல்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சுரேஷ் (45) என்பவர் ஓட்டி சென்றார். மகி பின்னால் அமர்ந்திருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த மகியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகி இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்