< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி

தினத்தந்தி
|
2 May 2023 6:45 PM GMT

சோழசிராமணி காவிரி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பரமத்திவேலூர்

கட்டிட தொழிலாளி

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செந்தில் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கொசவம்பாளையம் பகுதியில் வசிக்கும் தனது மாமனார் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். பின்னர் செந்தில், அவரது மைத்துனர் கார்த்தி மற்றும் அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் 4 பேருடன் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி காவிரி ஆற்று பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது செந்தில் காவிரி ஆற்றின் எதிர் கரையான ஈரோடு மாவட்டம், பாசூர் பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். ஆற்றின் நடுபகுதிக்கு சென்றபோது அவரால் நீந்த முடியவில்லை. இதனால் மூச்சு திணறி ஆற்றில் செந்தில் மூழ்கினார். இது குறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கும், வெப்படை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய செந்திலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சோழசிராமணி பகுதியில் உள்ள காவிரி கரையில் இறந்த நிலையில் செந்திலின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த செந்திலுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்