< Back
மாநில செய்திகள்
தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலி
தர்மபுரி
மாநில செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
12 April 2023 6:45 PM GMT

தர்மபுரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

தர்மபுரி மாவட்டம் அச்சல்வாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக கணவன், மனைவி தர்மபுரி அருகே ஆலங்கரை கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் ராஜேந்திரன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்