< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தொழிலாளி பலி
|7 Feb 2023 7:00 PM GMT
பழனி அருகே சரக்கு வேன் -மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.
பழனி அருகே உள்ள அ.கலையமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மகன் அருண் (வயது 23). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், மோட்டார் சைக்கிளில் வண்டி வாய்க்காலில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பழனியில் இருந்து உடுமலைக்கு சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.