< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி தொழிலாளி பலி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ரெயில் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
1 Nov 2022 6:45 PM GMT

கீழ்வேளூர் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.

தொழிலாளி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி ஊராட்சியில் கீழ்வேளூர் ெரயில் நிலையம் செல்லும் சாலையில் வசித்து வந்தவர் சந்திரசேகரன்(வயது 45). விவசாய கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் மாலை தனது மாட்டை திருக்கண்ணங்குடி ெரயில்வே கேட் அருகே மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ெரயில் வந்து கொண்டிருந்தது.

ரெயில் மோதி பலி

தண்டவாளம் அருகே மேய்ந்து கொண்டிருந்த மாடு, ரெயில் வருவதை பார்த்து தண்டவாளத்தை கடக்க முயன்றது. இதை பார்த்த சந்திரசேகரன் மாட்டை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீது ெரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாடு தண்டவாளத்தை கடந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சந்திரசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் நாகை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மோதி பலியான சந்திரசேகரனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்