< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி தொழிலாளி சாவு
கடலூர்
மாநில செய்திகள்

ரெயில் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
27 July 2023 6:45 PM GMT

விருத்தாசலத்தில் ரெயில்மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம்

விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கும், விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையத்துக்கும் இடையே நாச்சியார்பேட்டையில் உள்ள தண்டவாளத்தில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் அரியலூர் மாவட்டம் செந்துறை மணப்பத்தூர் நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ராயர்(வயது 44) என்பதும், விருத்தாசலம் நாச்சியார்பேட்டையில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு வந்திருந்ததும், தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்