< Back
மாநில செய்திகள்
டிராக்டர் மோதி தொழிலாளி பலி
கடலூர்
மாநில செய்திகள்

டிராக்டர் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
7 Feb 2023 6:45 PM GMT

புவனகிரி அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

புவனகிரி,

புவனகிரி அருகே சுத்துக்குழி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) தொழிலாளி. இவர் நேற்று காலை தனது மனைவி லட்சுமியை சைக்கிளில் ஏற்றுக்கொண்டு புவனகிரிக்கு புறப்பட்டார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் பலத்த காயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்