< Back
மாநில செய்திகள்
ெரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
தென்காசி
மாநில செய்திகள்

ெரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

தினத்தந்தி
|
11 Jan 2023 6:45 PM GMT

வீரவநல்லூரில் ெரயிலில் அடிபட்டு தொழிலாளி இறந்தார்.

வீரவநல்லூரில் ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தென்காசி ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ெரயிலில் அடிபட்டு இறந்தவர் வீரவநல்லூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பிரேம்குமார் (வயது 49) என்பது தெரியவந்தது. இவர் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்