< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி தொழிலாளி பலி
|14 Oct 2023 6:45 PM GMT
கடையம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அவ்வப்போது சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. இந்த நிலையில் பொட்டல்புதூர் பகுதியில் வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ள அப்பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கார்த்தீசன் (வயது 38) என்பவர் நேற்று மாலை வாகனத்திற்கு சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது அவர் மீது திடீரென மின்னல் தாக்கியயது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்தீசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் கார்த்தீசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.