< Back
மாநில செய்திகள்
ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
7 Sep 2023 7:06 PM GMT

ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள வைரவ நெல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 34). கூலித் தொழிலாளி. இவர் ஊரில் உள்ள ஊருணிக்கு குளிக்க சென்றார். நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உடனே அவரது குடும்பத்தினர் ஊருணிக்கு சென்று பார்த்த போது அவர் தண்ணீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்