< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் தொழிலாளி மர்ம சாவு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் தொழிலாளி மர்ம சாவு

தினத்தந்தி
|
8 Aug 2023 9:00 PM GMT

பெரியகுளத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

பெரியகுளம் அனுமார்கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அவரை லட்சுமி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை பெரியகுளம் அருகே பெருமாள்புரத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் முன்பு சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்