< Back
மாநில செய்திகள்
தொழிலாளி மர்ம சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

தொழிலாளி மர்ம சாவு

தினத்தந்தி
|
10 July 2023 8:32 PM GMT

ெதாழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

சிவகாசி,

சாத்தூர் படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 29). இவருக்கும் பாண்டிச்செல்வி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மாதேவி ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று லட்சுமணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உறவினரான சேகர் என்பவர் வந்து லட்சுமணனை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், லட்சுமணன் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பாண்டிச்செல்வி சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்