< Back
தமிழக செய்திகள்
விபத்தில் தொழிலாளி சாவு
திருநெல்வேலி
தமிழக செய்திகள்

விபத்தில் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
23 Aug 2023 1:39 AM IST

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்தார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று களக்காட்டிற்கு சென்று விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். ஊச்சிகுளம் அருகே சென்ற போது, சாலையோரமுள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்