< Back
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்தில் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
24 July 2023 6:56 PM GMT

விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குளம்

வெம்பக்கோட்டை தாலுகா குண்டாயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் புரட்சி வேந்தன் (வயது 37). இவர் சிவகாசி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் பணிநிமித்தம் காரணமாக இரு சக்கர வாகனத்தில் இ.டி.ரெட்டியபட்டி வழியாக சிவகாசிக்கு சென்றார். அப்போது சித்துராஜபுரத்திலிருந்து வந்த சரக்கு வாகனம், புரட்சிவேந்தன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த புரட்சிவேந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
மேலும் செய்திகள்