< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
தேனி
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
29 Sep 2022 1:27 PM GMT

தேவதானப்பட்டி அருேக மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 51). கூலித்தொழிலாளி. இன்று இவர், அந்த பகுதியில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகே நின்ற மரத்தை அவர் தொட்டார். அதில் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மரத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்