< Back
மாநில செய்திகள்
பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
18 Jun 2023 6:30 PM GMT

பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 49), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-ந்தேதி இரவு 9 மணியளவில் நாட்டார்மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் இருந்து பெரியசாமி கீழே தவறி ஓடையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்