< Back
மாநில செய்திகள்
கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி சாவு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
15 Jun 2023 6:55 PM GMT

ஆற்காடு அருகே கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ராமநாயன குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தி என்கிற செல்வேந்திரன் (வயது 35). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்துள்ளார். ஆற்காடு அடுத்த வேப்பூர் புதிய மேம்பாலம் கட்டும் பகுதியில் வரும் போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி செல்வேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே செல்வேந்திரன் பரிதாபமாக செத்தார். இது குறித்து அவரது மனைவி பபிதா அளித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்