< Back
மாநில செய்திகள்
மலைத்தேனீ கடித்து தொழிலாளி சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மலைத்தேனீ கடித்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
9 Aug 2023 7:28 PM GMT

மலைத்தேனீ கடித்து தொழிலாளி சாவு

மதுக்கூர் அருகே மலைத்தேனீ கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கூலித்தொழிலாளி

தஞ்சை மாவட்டம் மதுக்கூரை அடுத்த மூத்தாக்குறிச்சி புதிய ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 48). கூலித்தொழிலாளியான இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், வைத்தீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று காலை 11 மணியளவில் மூத்தாக்குறிச்சி ரேஷன் கடை அருகில் உள்ள பொதுப்பணித்துறை வாய்க்காலில் 100 நாள் பணியில் அறிவழகன் வேலைபார்த்து கொண்டு இருந்தார்.

மலைத்தேனீ கடித்து சாவு

அப்போது திடீரென மலைத்தேனீ அறிவழகனை கடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைத்தேனீ கடித்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்