< Back
மாநில செய்திகள்
கதண்டு கடித்து தொழிலாளி பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கதண்டு கடித்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
22 Sep 2023 8:03 PM GMT

கதண்டு கடித்து தொழிலாளி பலியானார்.

அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 55), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மிரட்டுநிலையில் உள்ள தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அங்கு இருந்த கதண்டு இவரை கடித்துள்ளது. இதையடுத்து அவர் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்