< Back
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விபத்தில் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
25 May 2022 3:20 PM GMT

உத்தனப்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் இந்திரா நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது25). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு ராயக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அகரம் முருகன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அந்த வழியாக சென்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்