< Back
மாநில செய்திகள்
தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
2 Jan 2023 6:45 PM GMT

விக்கிரவாண்டி அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் காலனியை சேர்ந்தவர் வடக்கு மலையான் (வயது 55) கூலித்தொழிலாளி. இவர் தினந்தோறும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த வடக்கு மலையான் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்