< Back
மாநில செய்திகள்
சங்கராபுரம் அருகே  தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சங்கராபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
15 Jun 2022 2:17 PM GMT

சங்கராபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் இளையராஜா (வயது 37), விவசாய கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று இரவு இளையராஜா இறந்தார். இது குறித்து அவருடைய மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து, இளையராஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்